ஈரோட்டில் 26 போலீசாருக்கு பணி நியமன சான்றிதழ்: எஸ்.பி., ஜவஹர் வழங்கல்

ஈரோட்டில் 26 போலீசாருக்கு பணி நியமன சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் வழங்கினார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஈரோட்டில் 26 போலீசாருக்கு பணி நியமன சான்றிதழ்: எஸ்.பி., ஜவஹர் வழங்கல்
X

தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு ஈரோடு மாவட்ட எஸ்பி ஜவகர் பணி நியமன சான்றிதழை வழங்கிய போது எடுத்த படம்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் ரூ.18,200 முதல் 67,100 வரை ஊதிய விகிதத்தில் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியில் காலியாக உள்ள 3552 இடங்களுக்கான தேர்வு 2022-ம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 2,180 (654 பெண்கள் உட்பட), தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 1,091, இரண்டாம் நிலை சிறை காவலர் பணிக்கு 161 (8 பெண்கள் உட்பட) மற்றும் தீயணைப்பாளர் பணிக்கு 120 பேர் தேர்வுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்த தேர்வாளர்களுக்கு எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு தகுதியுள்ள தேர்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த 19-ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேரில் வரவழைத்து தமிழக முதல்வர் பாராட்டி பணி நியமன ஆணை வழங்கினார். இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) 26-ம் தேதி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்திலிருந்து காவல் துறை பணிக்கு தேர்வான 18 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என மொத்தம் 26 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் பாராட்டி, பணி நியமன சான்றிதழ் வழங்கினார். மேலும், காவல் துறையில் உள்ள பணிகள், சிறப்புகள் பற்றி விளக்கி கூறி அறிவுறுரைகள் வழங்கியுள்ளார்.

Updated On: 27 May 2023 3:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    காலையில் தாசில்தார்- மாலையில் முன்னாள் தாசில்தார்: இங்கல்ல...
  2. அரசியல்
    மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
  3. அவினாசி
    அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
  4. காஞ்சிபுரம்
    சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
  6. தமிழ்நாடு
    இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
  7. திருப்பூர் மாநகர்
    விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
  8. தூத்துக்குடி
    புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
  9. நாமக்கல்
    உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
  10. தமிழ்நாடு
    நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்