/* */

பல வருடங்களுக்கு பிறகு நிரம்பிய ஆப்பக்கூடல் ஏரி: பொதுமக்கள் மகிழ்ச்சி

அந்தியூர் வரட்டுப்பள்ளம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த கனமழையால் ஆப்பக்கூடல் ஏரி நிரம்பியது.

HIGHLIGHTS

பல வருடங்களுக்கு பிறகு நிரம்பிய ஆப்பக்கூடல் ஏரி: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

நிரம்பி வழியும் ஆப்பக்கூடல் ஏரி.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் ஏரி உள்ளது. இந்த ஏரியயானது பவானி-சத்தியமங்கலம் நெடுஞ்சாலை அருகே சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி , கெட்டிசமுத்திரம் ஏரி , அந்தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி நிரம்பியது. வேம்பத்தி ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி ஆப்பக்கூடல் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வரட்டும் பள்ளம் அணை பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரியானது நிரம்பி ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் ஆப்பக்கூடல் ஏரியானது முழு கொள்ளளவான 11.50 அடியை எட்டி உபரிநீர் தற்போது வெளியேறி வருகிறது. வெளியேறி வரும் உபரிநீர் பவானி ஆற்றில் கலக்கிறது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பல வருடங்களுக்கு பிறகு நிரம்பியதை ஆர்வத்துடன் பார்த்துவிட்டு சென்றனர்.

Updated On: 14 Jan 2022 8:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  2. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  3. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  5. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  9. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  10. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!