/* */

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் உயிரிழப்பு

அந்தியூரில் நடந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பட்டதாரி ஆசிரியர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் உயிரிழப்பு
X

ஆசிரியர் வேலுமணி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர் வீதி பகுதியை சேர்ந்தவர் வேலுமணி (வயது 57). இவர் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் அவர் அந்தியூர் பர்கூர் ரோட்டில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த மாருதி ஆல்டோ கார் மோதியதில் படுகாயமடைந்த ஆசிரியர் வேலுமணி, அந்தியூரில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை அவரது உடல்நிலை மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பட்டதாரி ஆசிரியர் வேலுமணியின் உடல் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது

Updated On: 22 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?