/* */

தடை செய்யப்பட்ட பகுதியில் இயங்கிய கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு சீல்!

அந்தியூரில், தடை செய்யப்பட்டப்பகுதியில் இயங்கிய கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு, ஈரோடு கலெக்டர் கதிரவன் உத்தரவுப்படி, சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில், கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகளான புது மேட்டூர், பள்ளிபாளையம், தவுட்டுப்பாளையம் ஆகிய பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, ஈரோடு கலெக்டர் கதிரவன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ஒன்றான கருப்புசாமி கோயில் என்ற இடத்தில், பணியாளர்களை வைத்து தனியார் கார்மென்ட்ஸ் கம்பெனி ஒன்று இயங்கி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்தியூர் வட்டாட்சியர் வீரலட்சுமியிடம், கார்மெண்ட்ஸ் மூடி சீல் வைக்க கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். இதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள், அந்த கம்பெனிக்கு சீல் வைத்தனர். மேலும் இந்நிறுவனத்தின் மீது அந்தியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 14 Jun 2021 1:39 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு