/* */

அந்தியூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

அண்ணாமடுவு பஸ் நிறுத்தத்தில் வெள்ளைத்தாளில் நம்பரை எழுதி லாட்டரி என ஏமாற்றி விற்றவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

அந்தியூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
X

கைது செய்யப்பட்ட பொன்னுச்சாமி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சித்திரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர், இன்று காலை அண்ணாமடுவு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு, வெள்ளைத்தாளில் நம்பரை எழுதி லாட்டரி சீட்டு என பொதுமக்களிடம் ஏமாற்றி விற்றுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, தவிட்டுபாளையத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரிடமும், லாட்டரி சீட்டு என்று கூறி ஏமாற்றி விற்பனை செய்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் புகார் கொடுத்தார். அதன்பின் அப்பகுதிக்குச் சென்ற அந்தியூர் போலீசார் பொன்னுசாமியை கைது செய்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த அந்தியூர் போலீசார், பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னுச்சாமியை சிறையில் அடைத்தனர்.

Updated On: 23 Oct 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி