/* */

பிணையில்லா கடன் திட்ட வட்டி விகிதத்தை 9 சதவீதமாகக் குறைக்க வலியுறுத்தல்

பிணையில்லா கடன் திட்ட வட்டி விகிதத்தை 9 % குறைக்க வேண்டுமென மாவட்ட அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது

HIGHLIGHTS

பிணையில்லா கடன் திட்ட வட்டி விகிதத்தை 9  சதவீதமாகக் குறைக்க வலியுறுத்தல்
X

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 2 -ஆவது செயற்குழுக் கூட்டம் நசியனூர் சாலையில் உள்ள சங்கத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது

பிணையில்லா கடன் திட்ட வட்டி விகிதத்தை 9 % ஆக குறைக்க வேண்டுமென மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 2 -ஆவது செயற்குழுக் கூட்டம் நசியனூர் சாலையில் உள்ள சங்கத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் கே.கே.பாலுசாமி பங்கேற்றுப் பேசினார்.

இக்கூட்டத்தில், சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் நடராஜமுதலியார் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்கள், சிவநேசன், ஜெகதீசன், தேவராஜா, முன்னாள் செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கெளரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, அரசின் பிணையில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி சில்லறை மற்றும் மொத்த வணிகர்களுக்கும் கடன் வழங்க வேண்டும்.

தற்போது பிணையில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ள 12% வட்டியை 9 % குறைத்து வழங்க ஆவண செய்ய வேண்டும்.தற்போது, ஜி.எஸ்.டி. செலுத்தும் போது சலானில் மதிப்பீட்டாளர்கள் கட்டாயம் ஒப்பமிட வேண்டும் என வங்கிகள் கூறுகின்றன. இந்த நடைமுறை தொழில் வணிகர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.

எனவே, முகவர்கள் ஒப்பமிட்டாலே வங்கிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச் செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார். இதில், கூட்டமைப்பின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Sep 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  2. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  5. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  6. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  7. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  8. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...