/* */

பிரம்மதேசம் கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பானுமதி தேர்வு

அந்தியூர் பிரம்மதேசம் கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பானுமதி வெற்றி பெற்றார்.

HIGHLIGHTS

பிரம்மதேசம் கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பானுமதி தேர்வு
X

வெற்றி பெற்ற பானுமதி அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், சின்ன பருவாச்சியை சேர்ந்த பானுமதி என்பவர் போட்டியிட்டார்.

அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், 197 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் வைதேகியை விட 52 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பானுமதியிடம் வழங்கினார். வெற்றி பெற்ற பானுமதி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Updated On: 12 Oct 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்