/* */

அந்தியூரில் ரூ.2.53 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 2 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூரில் ரூ.2.53 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த 3,920 தேங்காய்கள், குறைந்த விலையாக 5 ரூபாய் 32 பைசாவிற்கும், அதிக விலையாக 15 ரூபாய் 22 பைசாவிற்கும், 12 மூட்டைகள் ஆமணக்கு கிலோ 71 ரூபாய் 9 பைசாவிற்கும் விற்பனையானது.

மேலும், 26 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 91 ரூபாய் முதல், 29 ரூபாய் வரையிலும், 5 மூட்டைகள் எள் கிலோ 125 ரூபாய் 9 பைசாவிற்கும், 5 மூட்டைகள் அவரை கிலோ 68 ரூபாய் 90 பைசாவிற்கும், 3 மூட்டைகள் கொள்ளு கிலோ 51 ரூபாய் 90 பைசாவிற்கும், 3 மூட்டைகள் உளுந்து கிலோ 67 ரூபாய்‌ 10 பைசாவிற்கும், 13 மூட்டைகள் துவரை கிலோ 50 ரூபாய் 10 பைசாவிற்கும் விற்பனையானது.

நேற்றைய வர்த்தகத்தில், மொத்தம் 57.24 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் 2 லட்சத்து 52 ஆயிரத்து 904 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 29 March 2022 5:15 AM GMT

Related News