/* */

அந்தியூர் காவல்துறையினரின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அந்தியூர் காவல்துறை சார்பில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

அந்தியூர் காவல்துறையினரின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X

அந்தியூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல்துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று மாலை பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து துவங்கியது.

இப்பேரணியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் கொடியசைத்து துவக்கி வைத்தார். பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பேரணி, சிங்கார வீதி ராஜவீதி வழியாக மீண்டும் பத்ரகாளியம்மன் கோவிலை வந்தடைந்தது.

பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள், போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான பதாகைகளை ஏந்தி கோஷமிட்ட சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் அந்தியூர் காவல் ஆய்வாளர் மோகன் ராஜ், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மங்களம் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Jun 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?