ஈரோட்டில் அகில பாரத இந்து மகா சபா ஆலோசனை கூட்டம்
ஈரோட்டில் அகில பாரத இந்து மகா சபா ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை (நேற்று) நடைபெற்றது.
HIGHLIGHTS
ஈரோட்டில் அகில பாரத இந்து மகா சபா ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை (நேற்று) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அகில பாரத இந்து மகா சபா தேசிய துணைத் தலைவரும், மாநில தலைவருமான த பாலசுப்பிரமணியன் தலைமையில், அகில பாரத இந்து மகா சபா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் தொல்காப்பியன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் யுவகிருஷ்ணன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் .அனைத்து மகளிருக்கும் மகளிர் உதவி தொகை வழங்கிட வேண்டும். ஈரோட்டில் சாய, சலவை தொழிற்சாலைகளுக்கு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளது அதனை விரைவில் சீரமைக்க வேண்டும். மாநகர பேருந்து நிலையம், சோலார் பேருந்து நிலையம் பணிகள் விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். இறுதியில், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.