ஈரோடு வடக்கு மாவட்ட அஇசமக சார்பில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Erode news- ஈரோடு வடக்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு வடக்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தேசப்பிதா என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 155வது ஜெயந்தி விழா திங்கட்கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா், தியாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் ஊராட்சியில் காந்தி நகரில் உள்ள காந்தியின் சிலைக்கு ஈரோடு புறநகர் வடக்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை (இன்று) காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் குருநாதன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், அந்தியூர் தொகுதி செயலாளர் செல்வகுமார், மாவட்ட நிர்வாக அலுவலர் குமாரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்