/* */

கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் தர்ணா

கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் தர்ணா
X

தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 12வது வார்டு அதிமுக கவுன்சிலர் சுமையாபானு.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் அவசர கூட்டம் நகராட்சி தலைவர் நாகராஜ் தலைமையில், நகராட்சி செயற்பொறியாளர் சுப்பிரமணி முன்னிலையில் தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும் 12 வார்டு அதிமுக கவுன்சிலர் சுமையாபானு, நகராட்சி தலைவர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது வார்டுக்கு உட்பட்ட சி.கே.எஸ்.நகரில் கடந்த பத்து நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சரி செய்ய நகராட்சி ஆணையாளரிடம் கூறி, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் நின்றனர். அதனைத்தொடர்ந்து, வார்டில் உள்ள பிரச்சினைகளை நகராட்சி தலைவர் என்ற முறையில் தெரிவித்தால் உடனடி யாக பாரபட்சமின்றி அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடைபெறும் என்று நகராட்சி தலைவர் நாகராஜ் தெரிவித்தார். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் போராட்டத்தை கைவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 14 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்