/* */

ஈரோடு லாட்ஜில் கேரளாவை சேர்ந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு லாட்ஜில் கேரளா மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஈரோடு லாட்ஜில் கேரளாவை சேர்ந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை
X

கேரளா மாநிலம் திருச்சூர் கொங்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்பாத் (வயது 37). ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுனில்பாத் எதற்காக ஈரோட்டுக்கு வந்தார்? குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என்று பல கோணங்களில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 17 Aug 2022 9:40 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?