கடம்பூர் அருகே அரசு பேருந்து மீது பிக்கப் வேன் மோதி விபத்து
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே அரசு பேருந்து மீது பிக்கப் வேன் மோதியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து பசுவனாபுரம் நோக்கி ஹாலோ பிளாக் கற்கள், சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தங்கவேல் (28) என்பவர் பிக்கப் வேன் ஒன்றை நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் ஓட்டி வந்துள்ளார். பிக்கப் வேன் இருட்டிபாளையம் அருகேயுள்ள ஓர் வலைவில் திரும்ப முயன்றுள்ளது, அதேபோன்று எதிரே கேர்மாளம் செக்போஸ்ட் பகுதியில் இருந்து கடம்பூர் நோக்கி அரசு பேருந்து ஒன்றை தேவராஜ் (45) என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
இருட்டிபாளையம் அருகே இறக்கமான பாதையில் வந்து வலைவில் திரும்ப முயன்ற பிக்கப் வேன் ஓட்டுநர், எதிரே மேடான பாதையில் இருந்து வந்த அரசு பேருந்து வருவதை கண்டு பிரேக் அடித்துள்ளார். ஆனால் பாரம் ஏற்றி வந்ததால் பிரேக் நிற்காமல் பிக்கப் வேன் அரசு பேருந்து மீது மோதியதில் பிக்கப் வேன் மற்றும் அரசு பேருந்து முன்புறம் உள்ள கண்ணாடி பாகங்கள் நொறுங்கியது, இதில் பெரிதாக யாருக்கும் எந்த விதம் காயமும் இல்லை.
இதனால் சிறிது அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தியதை தொடர்ந்து போக்குவரத்தை சீர்படுத்தினர். அதனையடுத்து விபத்துக்குள்ளான அரசு பேருந்தில் வந்த பயணிகளை இறக்கி விட்டு மற்றொரு பேருந்து வரவழைத்து பயணிகளை ஏற்றிச் அனுப்பி வைத்தனர்.