அந்தியூர் அருகே மலைப்பாதையில் மரங்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில், மரங்கள் ஏற்றி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் உள்ள இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் மரங்களை ஏற்றிவந்த, லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள குடகுமலை பகுதியில் இருந்து மரத்துண்டுகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த விஜயக்குமார் ஓட்டினார். உடன் மற்றொரு டிரைவராக அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் இருந்தார்.
இந்நிலையில், லாரியானது ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையின் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக லாரியை விஜயக்குமார் ஓரமாக ஒட்டி உள்ளார். அப் போது எதிர்பாராதவிதமாக ரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த 2 டிரைவர்களும் காயமின்றி உயிர் தப்பினர். இதுபற்றி அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக பர்கூர் மலைப்பாதையில், சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.