/* */

பெருந்துறையில் மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அயன்பாக்ஸ் மின்சாரம் தாக்கியதில், தனியார் ஜவுளி நிறுவன ஆய்வக பொறுப்பாளர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பெருந்துறையில் மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
X

பெருந்துறை காவல் நிலையம்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே பவானி ரோடு திருவாச்சி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 43). தனியார் ஜவுளி நிறுவன ஆய்வக பொறுப்பாளராக பணிசெய்தார். இந்நிலையில், இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக துணிகளை இஸ்திரி செய்தார். அப்போது மின்கசிவு ஏற்பட்டதில், மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டு மயங்கினார்.

பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 24 Sep 2022 5:30 AM GMT

Related News