/* */

ஈரோடு மாவட்டத்தில் நடந்த க்ரைம் சம்பவங்கள்; உங்கள் பார்வைக்கு

அத்தாணி அருகே, கணவர் இறந்த துக்கத்தில் மனைவி விஷம் குடித்து தற்கொலை உள்ளிட்ட முக்கிய தகவல்கள்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நடந்த க்ரைம் சம்பவங்கள்; உங்கள் பார்வைக்கு
X

ஈரோடு மாவட்ட குற்றச்சம்பவங்கள்

கணவர் இறந்த துக்கத்தில், மனைவி விஷம் குடித்து தற்கொலை‌

அத்தாணி அருகே உள்ள குப்பாண்டம்பாளையம் கரட்டூரை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி அரசாயாள் (42). கருப்புசாமி உடல்நலம் சரியில்லாதததால், நேற்று முன்தினம் இறந்தார். பின்னர், அவரது உடல் உறவினர்கள் வீட்டில் வைக்கப்பட்டு, துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கணவர் இறந்த துக்கத்தில் மனம் உடைந்து காணப்பட்ட அரசாயாள், வீட்டில் இருந்த விஷ மருந்தை குடித்து வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி, நேற்று காலை இறந்தார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர். கணவர் இறந்த துக்கம் தாங்காமல், மனைவி விஷம் குடித்து இறந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கிணற்றில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

சென்னிமலை அருகே உள்ள, சாணார்பாளையம் நல்லபாளி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 52). இவருடைய மனைவி சரோஜா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், சென்னிமலை அருகே உள்ள தட்டாரவலசு கருக்கன்காட்டு தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் ராமசாமி சடலம் மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சென்னிமலை போலீசார், சடலத்தை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ராமசாமி மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கோபி அரசு மருத்துவமனை வளாகத்தில், அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில், அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயக்கிய நிலையில், கீழே விழுந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவமனை டாக்டர்கள் முதியவரை பரிசோதனை செய்து பார்த்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து வீரபாண்டி வி.ஏ.ஓ மயிலேறு ரவீந்தரன், கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரச்சலூர் அருகே வாய்க்காலில், அழுகிய ஆண் சடலம் மீட்பு

மொடக்குறிச்சி அடுத்த அரச்சலூர் அருகே உள்ள வடுகபட்டி கீழ்பவானி வாய்க்காலில், அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக, வடுகப்பட்டி பொறுப்பு வி.ஏ.ஓ யுவராஜசேகருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் அரச்சலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, ஈரோடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 3 Oct 2022 11:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி