Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 470 ஆக உயர்ந்துள்ளது.
HIGHLIGHTS
சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 65 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 354 ஆக உயர்ந்தது.
56 பேர் குணமடைந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 150 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 470 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்