Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இருவர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டத்தில் 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை 788 ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (02.12.2021) கொரோனா பாதிப்பு நிலவரங்களை மாவட்ட நிர்வாகம் வௌயிட்டுள்ளது.
1. இன்று புதிதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு. மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி 55 வயது பெண்ணும், நேற்று 71 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
2. இன்று 71 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.
3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,06,440
4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,04,954
5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 788
6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 698
7.மாவட்டத்தில் நேற்று 7,560 பேருக்கு பரிசோதனை செய்ததில் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.8%