/* */

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 525 பேருக்கு அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 525 பேருக்கு போலீசார் அதிரடியாக அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 525 பேருக்கு அபராதம்
X

பைல் படம்.

கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தாக்கம் இருந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா அவ்வப்போது உருமாற்றம் அடைந்து மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தி வருகிறது. இதை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக் கவசம், சமூக வலை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா பரவால்லை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக கவசம் அணிந்து வர வேண்டும்.

பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. முகக் கவசம் அணியாமல் வந்தால் ரூ.200, பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார், வருவாய்த்துறையினர் தலா ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் முக கவசம் அணியாமல் வந்த 525 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 15 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  2. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  4. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  5. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  6. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  7. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  9. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  10. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!