/* */

சித்தோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

சித்தோடு அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சித்தோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
X

கோப்பு படம்

பவானி அருகே உள்ள சித்தோட்டை அடுத்த சொட்டையம்பாளையம், கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி இந்திராணி (வயது54). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் முருகேசன் உயிரிழந்த நிலையில், தனது மகன் நாகராஜ் (39) மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வருவதோடு, அப்பகுதியில் உள்ள தறிப்பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று வீட்டுக்கு இந்திராணி நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியே பைக்கில் அதிவேகமாக வந்த இருவர் இந்திராணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.45 ஆயிரம். இதுகுறித்து புகாரின் பேரில் சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 26 Jun 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?