Begin typing your search above and press return to search.
பவானி அருகே ஆற்றங்கரையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
பவானி அருகே ஆற்றோரம் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்ட செய்திகள் இன்று - ஈரோடு மாவட்டம், பவானி மாந்தோழிலார் தெரு சின்ன ஆற்றங்கரையில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து பவானி போலீசார் சம்பவ இடத்தில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த விஜயன் என்கிற விஜயகுமார், பாம்பாட்டி என்கிற மணி, மாணிக்கம் (22) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 300கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.