/* */

கீழ்வாணியில் கமிஷன் பணம் தருவதில் தகராறு: கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

அந்தியூர் அடுத்த கீழ்வாணியில் கமிஷன் பணம் தருவதில் தகராறு கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கீழ்வாணியில் கமிஷன் பணம் தருவதில் தகராறு: கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 3 பேர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த கீழ்வாணி அருகே உள்ள கேத்தநாயக்கனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (38). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி, திப்புசாமி மற்றும் சின்னகலசாமி ஆகியோர் கூட்டாக மரம் விற்பனை செய்ததில், கமிஷன் பணம் தருவதில் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 15ம் தேதி இரவு பழனிச்சாமி வீட்டிற்கு சென்று, சின்னசாமி, திப்புசாமி மற்றும் சின்னகலசாமி ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.

இதில் பழனிச்சாமி , அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் அவரது மகன் மாதேஸ்வரன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியதோடு, கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த பழனிச்சாமி மற்றும் பழனியம்மாள் பவானி அரசு மருத்துவமனையிலும், மாதேஸ்வரன் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 April 2022 6:59 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்