/* */

பர்கூர் மலைப்பகுதியில் 15 வயது சிறுமிக்கு திருமணம்; 3 பேர் மீது வழக்குப்பதிவு

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக தாய் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பர்கூர் மலைப்பகுதியில் 15 வயது சிறுமிக்கு திருமணம்; 3 பேர் மீது வழக்குப்பதிவு
X

Erode news, Erode news today- பர்கூர் காவல் நிலையம்.

Erode news, Erode news today- அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி தாமரைக்கரை அருகேயுள்ள தாளக்கரை பகுதியில் 15 வயது சிறுமிக்கு, நேற்று (வியாழக்கிழமை) காலை திருமணம் நடைபெற்றதாக ஈரோடு மாவட்ட சமூக நல குழந்தை திருமணத் தடுப்பு அலுவலர் சண்முகவடிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் ஞானசேகரன், சுபாஷினி, தேவகி மற்றும் வருவாய்த் துறையினர் பர்கூர் போலீசார் பாதுகாப்புடன் நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில், 15 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உறுதியானது.

இதையடுத்து, சிறுமியைத் திருமணம் செய்த இளைஞர் ஜோகி (வயது 22). திருமணத்துக்கு உடந்தையாக இருந்த ஜோகியின் தாய் இதயம்மாள் மற்றும் சிறுமியின் தாய் தொட்டதாயி ஆகியோர் மீது பர்கூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 9 Jun 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்