Begin typing your search above and press return to search.
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு
அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையத்தில் மளிகை கடையில் மின்சாரம் தாக்கியதில் 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் வேலாயுதம் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தி. இவர் கணவரை பிரிந்து மகன் சபரிஸ்ரீ (வயது 13) உடன் வசித்து வருகிறார். சபரிஸ்ரீ இந்த ஆண்டு 8-ஆம் வகுப்புக்கு செல்லும் நிலையில், பள்ளிக்கு செல்லாமல், அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று வந்து கொண்டு இருந்தது உள்ளார்.
இந்நிலையில், இன்று மதியம் கடையில் உள்ள யுபிஎஸ் ஒயரை எதிர்பாராதவிதமாக பிடித்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் தூக்கி வீசப்பட்டுள்ளான். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சபரிஸ்ரீயை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சபரிஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.