/* */

அந்தியூர் அருகே பள்ளி மாணவி மாயம்

அந்தியூர் அருகே 12-ம் வகுப்பு மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே பள்ளி மாணவி மாயம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கெட்டி சமுத்திரம் ஜெ.ஜெ. நகரரை சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி சின்னதாயி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இவர்களது 2-வது மகள் நந்தினி (வயது 16). இவர் ஆலாம்பாளையத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அழகேசன் மற்றும் அவரது மனைவி இருவரும் வழக்கம் போல் காலை வேலைக்கு சென்றனர். வீட்டில் நந்தினி மட்டும் இருந்து வந்தார்.

இந்நிலையில், நந்தினி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இரவு வேலை முடிந்து அழகேசன் அவரது மனைவி வீட்டுக்கு வந்தனர். அங்கு மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதுகுறித்து அழகேசன் அந்தியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 3 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  3. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  4. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  7. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  8. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!