/* */

சுற்றுசூழலுக்கு அச்சுறுத்தல் தரும் பந்துமுனை பேனா

விண்வெளி வீரர்கள் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட பால் பாயிண்ட் பேனா. இன்று மை போட்டு எழுதும் பேனாக்களை பயன்பாட்டில் இல்லாமல் செய்துவிட்டது

HIGHLIGHTS

சுற்றுசூழலுக்கு அச்சுறுத்தல் தரும் பந்துமுனை பேனா
X

எழுதப் படிக்கத் தெரிந்தவன் என்றால், அவன் பையில் பேனா இருக்க வேண்டும். இதுதான் எழுதப்படாத விதியாக இருந்தது. கத்தி முனையைவிடப் பேனா முனைக்கு வலிமை அதிகம். பேனா முனையால் எதையும் சாதிக்க முடியும் என பேனாவின் பெருமைகளை நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

அப்போதெல்லாம் எல்லோர் கையிலும் ஆறாம் விரல் போல் இங்க் பேனா முளைத்து இருந்த காலம். ஏதோ காரணத்தால் பேசாமல் இருந்த வகுப்பு தோழன், எழுதி கொண்டிருக்கும் போது இங்க் தீர்ந்து போக, 'பெஞ்ச்'ல் உதறிய ஒரு துளி இங்க்கை உறிஞ்சி எழுதும் போது மீண்டும் துளிர்க்கும் நட்பு, பேனா நட்பு. இந்த பேனாக்களில் அதிகம் தேய்மானம் என்றால் தன் நிப் மட்டுமே, மற்றபடி இங்க்கை நாம் எப்போதும் ஊற்றிக் கொள்ளலாம்.

ஆனால், இன்று பார்க்கும் இடங்களில் எல்லாம் பால்பாயின்ட் பேனாக்களின் ஆதிக்கம்தான். மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் பால்பாயின்ட் பேனாக்களால்தான் எழுதி வருகின்றனர். நிப் தேய்ந்தால் பழைய நிப்பை அகற்றிவிட்டுப் புதிய நிப்பை மாட்டி, அதே பேனாவைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். ஆனால், இன்று பால்பாயின்ட் பேனாவை ஒருமுறை மட்டும் பயன்படுத்தி, தூக்கி எறிந்துவிட்டு புது பால்பாயின்ட் பேனா வாங்குகிறோம்.

நாம் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பந்துமுனை பேனா சுற்றுப்புறச் சூழலை சீரழிக்கும் கோடரியாக மாறியுள்ளது என்பது தெரியுமா?

அதிலும் தற்போது "யூஸ் அண்ட் த்ரோ" அதாவது உபயோகித்து தூக்கி எறியும் வகை பேனாக்கள் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால் மக்களும் அவைகளைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

முன்பெல்லாம், ரீஃபில் தீர்ந்தவுடன், அதை மட்டுமே தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் ரீஃபில்லை அதில் போட்டு மீண்டும் பயன்படுத்துவோம். ரீஃபில் பிளாஸ்டிக்கில் செய்யப்படுவதால், அது மட்டுமே பிளாஸ்டிக் கழிவாகக் கருதப்பட்டது. இப்போது உறுதியான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட, பால் பாயிண்ட்பேனாக்கள் பிளாஸ்டிக் கழிவுகளாகிவிட்டன. இவை நாம் தெரிந்தே உருவாக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்.

இந்தப் பேனாக்களில் இருக்கும் உலோகத்தால் ஆன முனை, உள்ளே ஒட்டியிருக்கும் மை, காரணமாக மறுசுழற்சி செய்வதில் பல பிரச்னைகள் உள்ளன. அதனால் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பேனாக்கள் மக்காத கழிவாக மாறி மெல்லக் கொல்லும் விஷமாகப் பரவி வருகிறது.

சுற்றுப்புறச் சூழல் மாசுபாட்டிற்கும், உலக வெப்பமயமாதலுக்கும் வளரும் நாடுகளைக் குறை சொல்லும் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் தூக்கி எறியப்படும் பேனாக்கள், சுமார் கோடிக்கும் மேல் உள்ளது

பால் பாயிண்ட் பேனாக்களை, இதர பிளாஸ்டிக் பொருள்களைப்போல் மறுசுழற்சி செய்வது கடினம். சாதாரண பிளாஸ்டிக் கழிவுகள் மக்கிப் போக பல நூற்றாண்டு பிடிக்கும். இந்த பால் பாயிண்ட் பேனா கழிவுகள் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் மக்கிப் போகாது. இவை நிரந்தரக் கழிவுகளாக அப்படியே நிற்கும்.

Updated On: 5 Oct 2022 4:22 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  2. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  3. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  4. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  5. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  6. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  7. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  10. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்