/* */

பழனி குடியிருப்பு பகுதியில் தீவிபத்து: 4 வீடுகள் எரிந்து சேதம்

பழனி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் நான்கு வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

HIGHLIGHTS

பழனி குடியிருப்பு பகுதியில் தீவிபத்து: 4 வீடுகள் எரிந்து சேதம்
X

தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு பகுதி.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேட்டுத் தெருவில் உள்ள ஒரு குடிசை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடிசை வீடு என்பதால் தீ மளமளவென பரவி அருகிலுள்ள ஓட்டுவீடுகளுக்கும் பரவியது‌.

தீ விபத்து குறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் குடிசை வீட்டில் குடியிருந்த 90வயதான காமாட்சி என்ற மூதாட்டியை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு போராடி தீயை அணைத்தனர்.

குடிசை வீட்டில் பிடித்த தீ அருகில் உள்ள ஓட்டு வீடுகளிலும் பரவிய நிலையில் அந்த வீடுகளில் யாரும் வசிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பழனி டி.எஸ்.பி., சத்யராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Sep 2021 4:43 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்