/* */

முயல் வேட்டையில் ஈடுபட்ட 46 பேர் கைது

பழனி அருகே முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 46 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

முயல் வேட்டையில் ஈடுபட்ட 46 பேர் கைது
X

பழனி அருகே முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 46 பேர் கைது செய்யப்பட்டனர்.

​திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் வேட்டைநாய்களுடன் பலர் சுற்றித்திரிவதாக பழனி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனச்சரக அலுவலர் பழனிக்குமார் தலைமையில், வனத்துறையினர் தொப்பம்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நாற்பதுக்கும் மேற்பட்டோர் வேட்டை நாய்களு​டன் காட்டுப்பகுதிக்குள், சுற்றி ​திரிந்தனர். அவர்களை பிடித்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். ஆடிப்பெருக்கு திருவிழாவுக்காக, ஒ​ரே​​ சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் வேட்டையில் ஈடுபடுவதும், தற்போது பழனி பகுதியில் வேட்டையில் ஈடுபட்டதும், விசாரணையில் தெரியவந்தது.

மேலும், வேட்டையாடும் முயல்களை திருச்சி மாவட்டம், வீரப்பூரில் உள்ள பொன்னர்-சங்கர் கோயிலில் வைத்து வழிபாடு நடத்துவதும் வழக்கம் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, 26​ ​வேட்டை நாய்களுடன் 46​ ​பேரை​​ கைதுசெய்த வனத்துறையினர், வேட்டையில் ஈடுபடுவது சட்டப்படி தவறு; இனி வேட்டையாடக்கூடாது எனவும் எச்சரித்தனர். வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதித்த வனத்துறையினர் கைது செய்யப்பட்டவர்களை எச்சரித்து அனுப்பினர்.

Updated On: 3 Aug 2022 8:14 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்