Begin typing your search above and press return to search.
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக புதிய நிர்வாகிக்கு வரவேற்பு
திருப்பூர் செல்லும் வழியில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் விருப்பாட்சி கோபால்நாயக்கர் சேவா சங்கத்தினர் வரவேற்றனக்
HIGHLIGHTS

பைல் படம்
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில பொதுச் செயலாளருக்கு ஒட்டன்சத்திரத்தில் விருப்பாச்சி கோபால் நாயக்கர் சேவா சங்கத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் அடுத்த மூன்று ஆண்டுக்கா நிர்வாகிகள் தேர்வு மதுரையில் நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் தேர்வில் திருப்பூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் மாநில பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்வுக்குப் பின்னர் அவர் திருப்பூர் செல்லும் வழியில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில், விருப்பாட்சி கோபால் நாயக்கர் சேவா சங்கத்தின் சார்பாக தலைவர் செந்தில்குமார், செயலாளர் பெருமாள்சாமி மற்றும் நிர்வாகிகளின் சார்பாக வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக நிர்வாகிகள், கோபால் நாயக்கர் சேவா சங்கம் சார்பாக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.