/* */

ஒட்டன்சத்திரம் பகுதியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

HIGHLIGHTS

ஒட்டன்சத்திரம் பகுதியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்
X
ஒட்டன்சத்திரம் சுற்று வட்டார பகுதியில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி, கோம்பைபட்டி, சிந்தலவாடம்பட்டி, வேலூர், மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சூரியகாந்தி பயிரிட்டுள்ளனர்.

மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி தற்போது அறுவடைக்கு தயாராகும் நிலையில் கண்களைக் கவரும் வகையில் பூத்துக்குலுங்குகிறது.


எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலைக்கு சமமாக சாகுபடி செய்யப்படும் பயிர் சூரியகாந்தி. சூரியனை நோக்கியே இந்த மலர் இருப்பதால் இதற்கு சூரியகாந்தி என்று பெயர். மஞ்சள் நிறமாக இருக்கும். ஐந்து அடி உயரம் கூட வளரும் இது ஒரு வெப்ப மண்டல பயிர்.

சூரியகாந்தி செடியின் வயது 80 முதல் 90 நாட்கள். சில நேரங்களில் அறுவடை முடிய நூறு நாட்கள் கூட ஆகிடும்.

சூரியகாந்தி பயிருக்கு சத்துக்கள் அதிகமாக தேவைப்படுகிறது. மற்ற எண்ணெய் வித்து பயிர்களை காட்டிலும் நைட்ரஜன் சத்து சற்று கூடுதலாக தேவைப்படுகிறது. ஏனெனில் பூக்களின் அளவு பெரிதாக இருந்தால் தான் மகசூல் கூடும்.

Updated On: 19 Jan 2022 11:07 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?