/* */

நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை மகன் அரிவாளால் வெட்டும் வீடியோ வைரல்

நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை மகன் அரிவாளால் வெட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

திண்டுக்கல் அருகில் உள்ள தவசிமடையை சேர்ந்தவர் சின்னையா என்ற ஆரோக்கியசாமி ( 65 ) . இவருக்கு மரியபாக்கியம் ( 58 ) என்ற மனைவியும் , மரியயாகோப் , அமல்ராஜ் , லூர்துராஜ் மகன்களும் உள்ளனர். சொத்துக்களை மகன்களுக்கு பிரித்து கொடுப்பது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. 3-வது மகனான லூர்துராஜ் இது குறித்து தனது தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (20/07/2021) தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தனது தந்தை சின்னையாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க வந்த அவரது தாய் மற்றும் சகோதரர் மரியயாகோப் ஆகியோரையும் அரிவாளால் வெட்டி தாக்கினார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைபார்த்ததும் லூர்துராஜ் தப்பி ஓடி விட்டார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து லூர்துராஜை தேடி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சொத்து பிரச்சினையால் குடும்பமே அடித்துக் கொண்டது மகன் தந்தையை வெட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Updated On: 21 July 2021 11:59 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  4. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  5. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  6. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  7. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  8. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  9. இந்தியா
    ஸ்லோ டெத்... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜெயிலில் இப்படி ஒரு கொடுமையா?
  10. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......