/* */

தொடர்மழையால் திராட்சை பழங்கள் அழுகி வீணாகும் நிலை: விவசாயிகள் வேதனை

அறுவடைக்கு வந்த வியாபாரிகள் பழங்களின் தரத்தை பார்த்து வாங்காமல் திரும்பி செல்கின்றனர்

HIGHLIGHTS

தொடர்மழையால் திராட்சை பழங்கள் அழுகி வீணாகும்  நிலை: விவசாயிகள் வேதனை
X

தொடர் மழையால் திண்டுக்கல் அருகே நத்தம் பகுதியில் வெடித்துச்சிதறும் திராட்சை பழங்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பட்டணம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்மழையால் திராட்சை பழங்கள் வெடித்து அழுகி கீழே கொட்டுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் .

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பட்டணம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பன்னீர் திராட்சை சாகுபடி நடைபெறுகிறது .சமீபத்தில் இந்த பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக திராட்சை பழங்கள் வெடித்து அழுகி கீழே கொட்டுகின்றன .

வழக்கமாக திராட்சை சாகுபடியின்போது ஏக்கருக்கு ரூ. 3 லட்சம் வரை லாபம் கிடைக்கும் . இதற்காக விவசாயிகள் நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து உரம் , பூச்சி மருந்து தெளித்து சாகுபடி செய்து இருந்தனர் .இந்தநிலையில் திராட்சை பழங்கள் மழையால் அழிவுக்கு உள்ளாகியதால் விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . அறுவடைக்கு வந்த வியாபாரிகள் பழங்களின் தரத்தை பார்த்து வாங்காமல் திரும்பி செல்கின்றனர் . இதனால் திராட்சை விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர் .எனவே விவசாயிகள் திராட்சை பழங்களை மாடுகளுக்கு தீவனமாக வழங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது .

Updated On: 17 Nov 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்