/* */

நத்தத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நத்தத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

நத்தத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

நத்தத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் யூனியன் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் நத்தம் வட்டார தலைவர் ராமநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு, குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.9.000 வழங்க வேண்டும்.

ஊழியர்களுக்கு பணிக்கொடை ஒட்டுமொத்த தொகை என்ற பெயரால் அமைப்பாளருக்கு ரூ.1 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதை அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமாகவும், சமையலர், சமையல் உதவியாளருக்கு 3 லட்சமாகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும்.

ஓய்வுபெறும் வயதை சத்துணவு அமைப்பாளர்களுக்கு 60 வயதிலிருந்து 62 வயதாகவும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு 58 வயதிலிருந்து 60 வயதாகவும் உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் செயலாளர் கந்தசாமி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க தலைவர் சுரேஷ், ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் சுந்தரபாண்டி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Sep 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை