/* */

நத்தத்தில் சாலையில் நடந்த ஆட்டு சந்தை, காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்

கொரோனா விதிமுறைகளை மீறி நத்தத்தில் சாலையில் ஆட்டுச் சந்தை நடைபெற்றது.

HIGHLIGHTS

நத்தத்தில் சாலையில் நடந்த ஆட்டு சந்தை, காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்
X

நத்தம் ஆட்டுச் சந்தையில் கொரோனா விதி முறைகளை மீறி கூடிய கூட்டம். ஒருவர் கூட முக கவசம் அணியவில்லை.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் யூனியன் அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் வாரவாரம் ஆட்டுசந்தை ஞாயிற்றுக்கிழமை நடப்பது வழக்கம்.

இச்சந்தைக்கு தேனி,திருப்பூர்,கரூர், திருச்சி,சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் ஆடு வாங்குவதற்காக வருவார்கள். பல லட்ச ரூபாய் வர்த்தகம் நடைபெறும். ஆனால் கொரோனா பெரும்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 80 நாட்களாக நடைபெறாமல் இருந்தது.

இன்று காலை திடீரென நத்தம்- திண்டுக்கல் சாலை யூனியன் அலுவலகம் அருகே ஆடு விற்பனையாளர்கள், வியாபாரிகள் 200க்கும் மேற்பட்டோர் முகக் கவசம் அணியாமலும்,சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமலும் திடீரென சாலையில் கூடி ஆடு வியாபாரத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முறையாக ஆட்டு சந்தை நடப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 11 July 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  2. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  3. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  6. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  9. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  10. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?