Begin typing your search above and press return to search.
நத்தம் பகுதியில் போலி டாக்டர்கள் 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் போலி டாக்டர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் போலி டாக்டர்கள் அதிகம் இருப்பதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் நத்தம் அரசு தலைமை மருத்துவ அலுவலர் தங்கதுரை தலைமையில் நத்தம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன், சுகாதார துறையினர் நத்தம் மற்றும் சுற்று வட்டாரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், முறையாக மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக, சிறுகுடியில் குமார் (42), கோட்டையூரில் மதினா (32), நத்தத்தில் முருகேசன் (62), சாந்தி (55) ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.