/* */

திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - நத்தத்தில் பரபரப்பு

நத்தத்தில் திடீரென்று கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது; தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

HIGHLIGHTS

திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - நத்தத்தில் பரபரப்பு
X

தீப்பிடித்து எரிந்த கார். 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. ஊறுகாய் ஏஜென்சி நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமான காரை, மாரியம்மன் கோயில் முன்பாக நிறுத்தி வைத்துள்ளார். இன்று காலை, காரை ரவி ஸ்டார்ட் செய்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அதன் முன்பக்கம் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நத்தம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர். நத்தம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். திடீரென கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 Nov 2021 9:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  5. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  10. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?