/* */

நத்தம் அருகே அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி

நத்தம் அருகே அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி
X

நத்தம் அருகே அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார்(27). இவர் வெளிநாட்டில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு சொந்த வேலையாக சென்று மீண்டும் காசம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேம்பரளி பகுதியில் சென்ற போது நத்தத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து அவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து இறந்து போனார். மேலும் அவர் ஓட்டி வந்த வாகனம் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமானது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Aug 2021 1:50 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  7. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...