/* */

டெல்டா பகுதியில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவு

டெல்டா பகுதியில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும், கொள்முதல் செய்கின்ற நெல்லுக்கு உடனடியாக பணம் வழங்கவும் உத்தரவு

HIGHLIGHTS

டெல்டா பகுதியில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவு
X

உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி

திண்டுக்கல் மாவட்டம் கம்பிளியம்பட்டி கிராமத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா 2ம் கட்ட நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் தமிழக உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்

கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளனர். தமிழக அரசு சார்பில் கொரோனா நிதி ரூ 4ஆயிரமும், 14 வகை மளிகை பொருட்கள் வழங்கபட்டு வருகிறது. டெல்டா பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எம்பி, எம்எல்ஏ, மக்கள் பிரதிநிதிகள் எங்கெல்லாம் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களோ அங்கெல்லாம் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கவும், கொள்முதல் செய்கின்ற நெல்லுக்கு உடனடியாக பணம் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்களை கடந்த காலத்தில் ஐந்து நாள் 6 நாள் காத்திருந்து உள்ளனர். இனிமேல் அந்த நிலைமை ஏற்படக்கூடாது என்றும். 24 மணி நேரத்தில் நெல் கொள்முதல் செய்து அந்த பணத்தை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் மழைக்காலத்தில் நெல் சேதாரம் ஆகாமல் இருக்க சைலோ முறையை கொண்டு வந்து நவீன அரிசி ஆலைகள் தொடங்கப்படும். மக்களுக்கு தரமான அரிசி கொடுக்க வேண்டும் அதேபோல் எடையும் சரியாக இருக்க வேண்டும். விவசாயி நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என உணவுத் துறைக்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். வரும் காலங்களில் விவசாயம் நலன் பாதுகாக்கப்படும்.

தமிழ்நாட்டில் 2 கோடியே 9 லட்சம் பேர் குடும்ப அட்டை வைத்துள்ளார்கள் அவர்களுக்கு வேண்டிய தரமான அரிசி வழங்கப்படும். டெல்டா பகுதியில் கேட்கிற இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

Updated On: 18 Jun 2021 3:43 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  6. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  7. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  9. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  10. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!