/* */

திண்டுக்கல் மாவட்டத்தில் 10-க்கும் மேலான ஊராட்சிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் 310 பேருக்கு பதிலாக 110 பேருக்குமட்டுமே தடுப்பூசி போடப்பட்டது

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்டத்தில்  10-க்கும் மேலான ஊராட்சிகளில்   தடுப்பூசி தட்டுப்பாடு
X

திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட ஊராட்சிகளில் போதிய அளவிலான தடுப்பூசி இல்லாத காரணத்தினால் பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் திரும்பி சென்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. இதில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1224 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், பொது மக்களுக்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனையடுத்து, பொதுமக்கள் அதிகாலை முதல் தங்களது பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்தனர். இருப்பினும் போதிய அளவிலான தடுப்பூசி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காண முடிந்தது.

திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் 310 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. ஆனால், 110 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இதன் காரணமாக பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Updated On: 12 Sep 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்