Begin typing your search above and press return to search.
குடியரசு தின விழா: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியேற்றினார்
திண்டுக்கல்லில் 73வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செய்தார்.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் 73வது குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து மூவர்ண பலூன் , சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன. அதனை தொடர்ந்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் மருத்துவம், வருவாய், காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் 596 பேருக்கு கேடயம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. கொரானா நெறிமுறை காரணமாக நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் விழாவில் கலந்து கொண்டனர்..