/* */

நீதிமன்றத்தில் ஜோதிமுருகனை ஆஜர்படுத்த கோரி மகிளா நீதிமன்றத்தில் போலீசார் மனு

இன்று 26.11.2021 கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

HIGHLIGHTS

நீதிமன்றத்தில் ஜோதிமுருகனை ஆஜர்படுத்த கோரி  மகிளா நீதிமன்றத்தில் போலீசார் மனு
X

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் (பைல் படம்)

திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய வழக்கில், போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்த கல்லூரி தாளாளர் அமமுக பிரமுகர் ஜோதிமுருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திமன்றத்தில் ஜோதிமுருகனை ஆஜர்படுத்த கோரி திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

திண்டுக்கல் பழனி சாலையில் முத்தம்பட்டி அருகே செயல்பட்டு வரும் சுரபி கல்லூரியின் தாளாளரும் அம்மா மக்கள் முன்னேற்ற கலகத்தில் அம்மா பேரவை இணை செயலாளராக இருந்த ஜோதி முருகன் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக எழுந்த புகாரை அடுத்து, மூன்று மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் இரண்டு வழக்குப்பதிவு செய்து கல்லூரியில் விடுதி காப்பாளர் அர்ச்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட வந்த கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம்,போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து ஜோதி முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்த கல்லூரி தாளாளர் அமமுக பிரமுகர் ஜோதி முருகனை சம்பந்தப்பட்ட வழக்கிற்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனுமதி கோரி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி புருசோத்தமனிடம் மனுத்தாக்கல் செய்துள்ளனர்,

இதை அடுத்து இன்று 26.11.2021 கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஜோதி முருகன் ஆஜராகும் போதும் வழக்கு தொடர்பான உண்மை நிலைகளை அறியும் வகையில் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த தாடிக்கொம்பு காவல் நிலைய விசாரணை ஆய்வாளர் லூர்து விக்டோரியா மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகன் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யும்போது, பாலியல் ரீதியாக கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறியது தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் ஏற்கனவே ஜோதிமுருகன் பயன்படுத்திய சொகுசு காரையும், அவர் பயன்படுத்திய செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடும்போது, மகளிர் அமைப்புகள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்களால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாவட்ட நீதிமன்றத்தில் போலீஸார் கூடுதல் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

Updated On: 25 Nov 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  2. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  3. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  4. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  5. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  6. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  7. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  8. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    இனிமே சமையலுக்கு மட்டுமல்ல... முகம் பளிச் என மாறவும் உதவப் போவது...
  10. ஆன்மீகம்
    விடுதலை விடுதலை பாடல்..! எதில் இருந்து விடுதலை..?