/* */

மாதம் ஊதியம் : ஊராட்சி நிர்வாகம் வழங்க தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, கொடைக் கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

HIGHLIGHTS

மாதம் ஊதியம் : ஊராட்சி நிர்வாகம் வழங்க  தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை
X

திண்டுக்கல் தனியார் திருமண மஹாலில், மாநில தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற, மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை (சிஐடியு) ஊழியர் சங்க மாவட்ட ஆண்டு பேரவை கூட்டம். 

தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை ஊராட்சி நிர்வாகமே நேரடியாக வழங்க வேண்டும் என மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை (சிஐடியு) ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திண்டுக்கல் தனியார் திருமண மஹாலில் மாநில தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை (சிஐடியு) ஊழியர் சங்க மாவட்ட ஆண்டு பேரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்ட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்: முன்கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த தொகை ரூ. 15 ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும். மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு அரசு அறிவித்த அடிப்படையில் ரூபாய் ஆயிரத்தி நானூறு ஊதிய உயர்விற்கான அரசாணையை உரிய திருத்தம் செய்து வெளியிட்டு அமலாக்கம் செய்ய வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம் நேரடியாக சம்பளம் வழங்கி, சேமநல நிதி பிடித்தம் செய்ய வேண்டும்.


அரசு ஊழியர் மற்றும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். ஊராட்சி தினக்கூலி ஒப்பந்த சுய உதவி குழு தூய்மைப் பணியாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நியமித்த தினக்கூலி ரூ. 509 வீதம் ஊதியம் வழங்க வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆகியவற்றில் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் வாரிசுகளுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கணேசன், மாநில பொருளாளர் ராணி, மாவட்ட நகர ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்

Updated On: 29 Aug 2021 9:34 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  3. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  4. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  5. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  6. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  7. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  8. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  9. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  10. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!