Begin typing your search above and press return to search.
திண்டுக்கல்லில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் கந்தூரி விழா
திண்டுக்கல் நாகல்நகர் ஜும்மா பள்ளி வாசலில் மதநல்லிணக்க கந்தூரி விழா நடைபெற்றது
HIGHLIGHTS
திண்டுக்கல்லில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் கந்தூரி விழா நடைபெற்றது
திண்டுக்கல் நாகல்நகர் ஜும்மா பள்ளியில் கந்தூரி விழா நடைபெற்றது. முகமது நபிகளின் நினைவாக நான்காம் ஆண்டு நடைபெற்ற விழாவில் சாதி, மத பேதமின்றி மத நல்லிணக்கத்துடன் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. 3 டன் அரிசி 400 கிலோ கறி சமைத்து 25 ஆயிரம் பேர் பயன் பெறும் வகையில் 5:30 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை உணவு வழங்கப்பட்டு வருகின்றது. நாகல் நகர் ஜும்மா பள்ளி தலைவர் அகமது புகாரி, செயலாளர் அலாவுதீன் பொருளாளர் சௌகத்அலி மற்றும் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் விழாவிற்கு வந்த அனைவருக்கும் உணவு வழங்கினார்கள்.