Begin typing your search above and press return to search.
மகளிர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா
திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழாவை பெண் காவலர்கள் பட்டு சேலை உடுத்தி கொண்டாடினர்
HIGHLIGHTS
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பெண் காவலர்கள் தமிழர் பாரம்பரிய பட்டுச் சேலை உடுத்தி பொங்கல் கொண்டாடினர்.
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. தமிழகத்தில் பொங்கல் விழா பட்டிதொட்டியெல்லாம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களும் 5 நாட்களுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டதால் நேற்று பல அலுவலகங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஆனால், போலீஸாருக்கு எப்போதும் விடுமுறை இல்லாததால் இன்று அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் பெண் போலீஸார் புத்தாடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். அப்போது அவர்களின் குழந்தைகளும் பங்கேற்றனர். .பின்பு இனிப்புகளை அனைவருக்கும் வழங்கி பொங்கலுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.