/* */

பட்டப்பகலில் பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை - 4 பேர் கைது

திண்டுக்கல் அருகே , பட்டப்பகலில் அரசு ஊழியரின் மனைவியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பட்டப்பகலில் பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை - 4 பேர் கைது
X

கொள்ளை வழக்கில் கைதானவர்கள். 

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இ.பி.காலனி பகுதியில் குடியிருப்பவர் துரை/ இவர் போக்குவரத்துதுறை அலுவலர் ஆவார். இரு தினங்களுக்கு முன்பு, காலை 10 மணிக்கு வழக்கம்போல் துரை வேலைக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி சுஜாதா (55) வீட்டில் தனியாக இருந்தார்.

வீட்டினை நோட்டமிட்ட 4 பேர்கொண்ட மர்ம கும்பல், வீட்டிற்குள் புகுந்து சுஜாதாவை கட்டிப்போட்டு அவரிடம் இருந்து பீரோ சாவியை பறித்து பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் எஸ்பி சீனிவசன் உத்தரவின் பேரில், தனிப்படையினர் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் பொன்னகரத்தை சேர்ந்த ஆசைத்தம்பி ( 36), பர்மா காலனியை சேர்ந்த சுரேஷ் (32), கரூரை சேர்ந்த மதன்குமார்(25), திருச்சியை சேர்ந்த சிவா(24) ஆகிய 4 பேரை 24 மணி நேரத்தில் கைது செய்து அவர்களிடமிருந்து 7 சவரன் நகைகள் மற்றும் பணம் ரூ.50,000 ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 3 Dec 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்