திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
இந்நிகழ்வில் கிளை செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
HIGHLIGHTS
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் 113 -வது பிறந்த நாள் விழா (15.09.21) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ் தலைமையில், நத்தம் பேரூராட்சி தலைவர் ஆர்.வி.என். கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரேம்குமார், தென்னம்பட்டி பழனிச்சாமி, பரமசிவம், மத்திய கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து இனிப்பு வழங்கினர்.
பின்னர், தொண்டர்கள் மத்தியில் அமைப்புச் செயலாளர் மருதராஜ் பேசுகையில், தொடர்ந்து பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சி காலத்தில் மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தது. தற்போது பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு இறங்கியுள்ளது. வரவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அ தி மு க வெற்றி பெறும் என்றார் அவர். இந்நிகழ்வில் கிளை செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.