Begin typing your search above and press return to search.
சென்னையை தூய்மைப்படுத்த உதவிக்கரம் நீட்டும் திண்டுக்கல் மாநகராட்சி
மழையால் பாதித்த சென்னை நகரை சுத்தம் செய்வதற்காக, திண்டுக்கல் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை நகரம் வெள்ளக்காடானது. இதன் காரணத்தால் சென்னையில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, சென்னையில் பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து , பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னை நகரை தூய்மைப்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சி உதவிக்கரம் நீட்டியுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து தூய்மை பணியாளர்கள் 50 க்கும் மேற்பட்டோர், ஒரு வார காலத்திற்கு தூய்மைப்பணி செய்வதற்காக, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.