வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் நிவாரண உதவி
ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதா என ருசி பார்த்து ஆய்வு மேற்கொண்டார்
HIGHLIGHTS
திண்டுக்கல்லில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னால் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று (25.11.2021) சுமார் ஆறு மணி நேரம் கன மழை பெய்தது. இதன் காரணமாக திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்தனர் .இதனை தொடர்ந்து, இன்று ஜிஎஸ் நகர், குறும்பபட்டி, மரியநாதபுரம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் .
மேலும், ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற ஆலோசனை வழங்கி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு கள் தரமானதா என உண்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.