/* */

போடிக்காமன்வாடி ஊராட்சி துணைத்தலைவரின் இணை கையெழுத்து அதிகாரம் ரத்து

போடிக்காமன்வாடி ஊராட்சி துணைத்தலைவரின் இணை கையெழுத்து அதிகாரத்தை ரத்து செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

போடிக்காமன்வாடி ஊராட்சி துணைத்தலைவரின் இணை கையெழுத்து அதிகாரம் ரத்து
X

பைல் படம்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரை அடுத்த போடிக்காமன்வாடி ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். துணைத்தலைவர் விஜய்பழனி, செலவின பட்டுவாடா படிவத்தில் கையெழுத்திட மறுத்துள்ளார். எனவே மற்ற உறுப்பினர்கள் துணைத்தலைவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர்.

நிர்வாகத்தில் இணை கையெழுத்து பொறுப்பை விஜய்பழனியிடம் இருந்து பறித்து, 9 வது வார்டு உறுப்பினர் முத்துமாரிக்கு வழங்க வலியுறுத்தினர்.

ஆய்வு செய்த ஆத்தூர் பி.டி.ஓ., ஊராட்சி நிர்வாகத்திற்கு துணைத்தலைவர் ஒத்துழைக்க மறுத்ததை உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து துணைத்தலைவரின் இணை கையெழுத்து அதிகாரத்தை கலெக்டர் விசாகன் ரத்து செய்தார். 9வது வார்டு உறுப்பினர் முத்துமாரிக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Updated On: 30 Nov 2021 1:48 PM GMT

Related News

Latest News

  1. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  2. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  3. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  4. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  5. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  6. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  7. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்